×

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

*கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் : 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகை மேட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவருக்கு திருமணம் ஆகி 1 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மணிகண்டனின் மனைவிக்கு பார்வை தெரியாததால், குழந்தையை பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது கடந்த 2021ம் ஆண்டு அந்த சிறுமியை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ரத்தினம் ஆஜராகி வாதாடினார்.

The post 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,POCSO court ,Cuddalore POCSO Court ,Manikandan ,Majali ,Mat ,Panruti ,
× RELATED ‘ஆபரேஷன் அகழி ’யில் கைதான ஐஜேகே...