×

கன்னியாகுமரி அருகே குடும்ப தகராறில் பெயிண்டர் தற்கொலை

கன்னியாகுமரி,செப்.24: கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் மிஷன் காம்பவுண்டை சேர்ந்தவர் சிவக்குமார்(31), பெயிண்டர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த சிவக்குமார் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கன்னியாகுமரி அருகே குடும்ப தகராறில் பெயிண்டர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Painter ,Kanyakumari ,Shivakumar ,Compound ,
× RELATED சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கன்னியாகுமரி கடற்கரையில் தூய்மை பணி