×

மின்சாரம் பாய்ந்து வங்கி ஊழியர் பலி: புழல் அருகே சோகம்

புழல்: புழல் அருகே டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த காகத்தை அகற்றியபோது, மின்சாரம் பாய்ந்து தனியார் வங்கி ஊழியர் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. புழல் அடுத்த விநாயகபுரம், வி.எம்.கே.நகரை ேசர்ந்தவர் டேவிட் ஜெபராஜ்(28). போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை இரவது வீட்டின் எதிரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில், ஒரு காகம் இறந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த டேவிட் ஜெபராஜ், தனது வீட்டின் மேல் மாடிக்கு சென்று, வீடு துடைக்கும் இரும்பு கம்பியால் காகத்தை அகற்ற முயன்றபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் கிடந்த டேவிட் ஜெபராஜை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த புழல் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post மின்சாரம் பாய்ந்து வங்கி ஊழியர் பலி: புழல் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,David Jebaraj ,VMK Nagar, Vinayakapuram ,Borur ,
× RELATED இருவேறு விபத்துகளில் இரண்டு வாலிபர்கள் பலி: 3 பேர் படுகாயம்