×

பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்த கால நீட்டிப்பு

நாகர்கோவில், செப்.17: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடத்துவது சார்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி அளவில் போட்டிகள் நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு சார்ந்து மாவட்டங்களிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து, பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றியாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்வதற்கு செப்டம்பர் 27ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

இப்போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிறப்புப் பள்ளிகள் உட்பட அனைத்து மாணவ , மாணவியருக்கும் வாய்ப்பளித்தல் வேண்டும். இந்த விவரத்தினை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சிறப்புப் பள்ளிகள் உட்பட தெரிவித்து மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்த கால நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,State ,Program ,Integrated School Education ,Dinakaran ,
× RELATED பெண்கள் கை காட்டியும் நிற்காமல் சென்ற...