×

விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்: படகு சவாரி செய்து உற்சாகம்

ஏற்காடு: தொடர் விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காடு, பூலாம்பட்டியில் இன்று சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை, நாளை மறுநாள் மிலாது நபி என தொடர் விடுமுறையையொட்டி, ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். லேடீஸ் மற்றும் ஜென்ட்ஸ் சீட் பகுதிகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதேபோல், இடைப்பாடி அருகேயுள்ள பூலாம்பட்டியில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் கடைகளில் மீன்களை வாங்கி சுவைத்து சாப்பிட்டனர். பின்னர், விசை படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, மேட்டூர் அணை பூங்கா, ஒகேனக்கல்லிலும் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

The post விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்: படகு சவாரி செய்து உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Phoolampatti ,Salem district ,Yercaud, ,Poolampatti ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி