×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், செப்.14: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (14.9.2024) காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் ஊவேரி, உத்திரமேரூர் வட்டத்தில் புலிவாய், வாலாஜாபாத் வட்டத்தில் அகரம், பெரும்புதூர் வட்டத்தில் கப்பாங்கோட்டூர், குன்றத்தூர் வட்டத்தில் வழுதலம்பேடு ஆகிய கிராமங்களில் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாமில், மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி, மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram District ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்