×

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை(செப்.13) தீர்ப்பு வழங்க உள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மாா்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு டெல்லி உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. கடந்த ஜூலை 12-ம் தேதி அமலாக்கத் துறை வழக்கில், கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Supreme Court ,Kejriwal ,CBI ,Chief Minister Kejriwal ,Madhupanak ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா...