×

விருச்சிக ராசி நோயும் தீர்வும்

விருச்சிக ராசியினர் தங்கள் நோய் மற்றும் இயலாமையை ரகசியமாக வைத்திருப்பர். இவர்களுக்கு மேல் வயிறு, அடி வயிறு தொடர்பான நோய்களும் மன அழுத்த நோயும் வரக் கூடும். இவர்களில் பலர் விளையாட்டு வீரர்கள் சண்டை பயிற்சியாளர், தீயனைப்புத்துறை, போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் பணி செய்வர். இவர்கள் கீழே மேலே விழுவதால் ரத்தக் காயம் ஏற்படுவதும் எலும்பு முறிவுகள் ஏற்படுவதும் உண்டு. அப்போது இவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவர். இவர்களுக்கு நோய் விரைவில் குணமாகும்.

மற்ற ராசிக்காரர்களை விட விருச்சிக ராசிக்காரர்களுக்கு விரைவில் குணமாக வாய்ப்புகள் மிகுதி.பாலுறுப்பு நோய்கள்விருச்சிக ராசியினருக்கு பாலுறுப்பு தொடர்பான நோய்களும் அந்த நோயின் அறிகுறியாக தோல் வியாதிகளும் வர வாய்ப்பு அதிகம். சிறுநீர்ப் பாதையில் தொற்று, வாய்ப்பகுதியில் அழற்சி, கருப்பை புற்று, ஒழுங்கற்ற மாத விடாய் கோளாறுகள், சிறுநீரக கல் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.ரகசியம் பரம ரகசியம்விருச்சிக ராசியினருக்கு வரும் நோய்கள் வெளியே தெரியாத நோய்களாக இருக்கும்.

அதனால் இவர்கள் சில நாள் ஓய்வெடுத்து சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் பழையபடி உற்சாகமாக கல்லூரிக்கோ வேலைக்கோ திரும்பி விடுவார்கள். இவர்கள் சுகம் இல்லாமல் இருந்தனர் என்பதே வெளியே யாருக்கும் தெரியாது.வயிற்றுக் கோளாறுகள்விருச்சிக ராசியினருக்கு மனக்கவலை அதிகமாகும் போது பசியின்மை, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி, புளிச்சேப்பம், வாய்வுத் தொந்தரவு போன்ற வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம்.

செவ்வாய் ராசி என்பதால் இவர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே பித்த மயக்கம் பித்த வாந்தி போன்ற பாதிப்புகள் இருக்கும். போதை ஆகாதுவிருச்சிக ராசியினருக்குப் போதை பழக்கம் கூடவே கூடாது. இவர்கள் குடிகாரர்களாக இருந்தால் கல்லீரல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு வரும். பின்பு அடிக்ஷன் சென்டர்களுக்கு அழைத்துச் சென்று சிலரைக் குணப்படுத்த வேண்டி இருக்கும். எல்லா விருச்சிக ராசிக்காரர்களுக்கும் அவ்வாறு இருப்பதில்லை விருச்சிக ராசி அல்லது விருச்சிக லக்னத்துக்காரர்களுக்கு பாவ கிரக சேர்க்கை இருந்தால் மனநோய்த் தாக்குதலும் உண்டாகும்.

மன அழுத்த நோய் விருச்சிக ராசியினர் சில காலம் குடி நோய் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு குணமாகி பழையபடி ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் உழைப்பதைக் காணலாம். சந்திரன் நீசமாகும் ராசி என்பதால் இவர்களுக்கு மனக்குழப்பம், மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை, பசியின்மை காரணமாக உடல் மெலிந்து காணப்படுவதும் உண்டு. மது, மாமிசம் விருச்சிக ராசியினர் எளிதில் உணர்ச்சிவசப்படுவர் ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

இதனால் இவர்கள் இறைச்சி உணவு மது மாமிசம் மற்ற லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது மிக மிக நல்லது. இயற்கையிலேயே பித்த சரீரம் அல்லது உஷ்ண உடம்பை கொண்ட இவர்களுக்கு மது மாமிசம் போன்றவை தீராத துன்பத்தைத் தரும். எளிய உணவு உட்கொள்ள வேண்டும். காய்கறி, பழ வகைகள் அதிகமாக சாப்பிடுவது சிறந்தது. நொறுக்குத் தீனிக்கு இவர்கள்வடை, சிப்ஸ் சாப்பிடாமல் பருப்புகள் சாப்பிடலாம். எளிய உணவு இவர்களுக்குள் கோப்பும் ஆசையும் பொங்காமல் தடுத்து நிற்கும். பல துன்பங்களை இவர்களே வரவழைத்துக் கொள்வார்கள்.

உழைப்பின் மேன்மை விருச்சிக ராசியினர் நல்ல உடல் வலிமையும் வெகு நேரம் உழைக்கக்கூடிய சக்தியும் பெற்றவர்கள். வாழ்க்கையில் நல்ல குறிக்கோள்களை அமைத்துக் கொண்டு நல்ல நண்பர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டு குழுவாக செயல்படும்போது இவர்கள் அடுக்கடுக்காக பல வெற்றிகளை காண்பார்கள். அப்போதும் இவர்கள் தங்களுடைய வெற்றியை கொண்டாடி களிப்பது கிடையாது. அமைதியாகவே ஏற்றுக்கொள்வர். இவர்களின் அமைதி கடல் ஆழத்தைப் போல அர்த்தமுடையதாகத் தோன்றும். இவர்கள் ஆரவாரம் செய்வது கிடையாது. அன்பும் அமைதியும் பண்பும் உடையவர்கள்.

சிக்கினால் சின்னா பின்னம் தான் இயற்கையில் அமைதியான குணம் உடைய விருச்சிக ராசியினர் கெட்ட பழக்கங்களை பழகுவதில்லை. துஷ்டரை கண்டால் தூர விலகிவிடுவர். சிக்கிக் கொண்டால் சின்னாபின்னமாகிவிடுவர். உடனடி தீர்வுஎல்லோரும் குடித்து கொண்டாடும் இடத்துக்குப் போக மாட்டார்கள் போய்விட்டால் ஒரு ஓரமான மேசையில் உட்கார்ந்து விடியும் வரை குடித்துக் கொண்டே இருப்பார்கள். விருச்சிக ராசியினருக்கு குடிப்பழக்கம் அல்லது வேறு போதைப் பழக்கம் ஏற்பட்டு விட்டால் அதனை ஆரம்பத்திலேயே சரி செய்து விட வேண்டும். இல்லை எனில் இவர்களால் அதை நிறுத்தவே இயலாது.

நீச சந்திரன் மனக்கட்டுப்பாட்டைத் தராமல் மேலும் மேலும் போதையிலேயே ஆழ்த்தி விடுவர். மனக்கவலை காரணமாக சாப்பிடாமல் தூங்காமல் தங்களுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் சிலர் இரவு பகல் பாராமல் குடிப்பார்கள். தனிமை நோவுவிருச்சிக ராசியினர் வேறு யாரிடமும் தங்களுடைய மனக் கவலையையும் உடல் நலக் கோளாறுகளையும் எடுத்துக் கூறாமால் தனிமையிலேயே இருப்பதனால் இவர்களுக்கு என்ன பிரச்னை என்பது வேறு எவருக்குமே தெரியாது.

அடுத்த வீட்டுக்காரருக்கும் அல்லது அடுத்த மேசையில் அமர்ந்து வேலை பார்ப்பவருக்கும் கூட தெரியாது. எப்போதும் பார்ப்பதற்கு கண்ணியமாகவும் கட்டுப்பாடாகவும் தோற்றமளிக்கும் இவர்கள் தங்களுடைய வலி வேதனைகளைப் பிறர் அறியக் காட்டுவதில்லை. பிறரிடம் சொல்லி ஆறுதல் தேடுவதுமில்லை. காரணம் இவர்களுக்கு மற்றவர்கள் மீது அவநம்பிக்கையும் கொஞ்சம் பொறாமையும் இருக்கும். யாரையும் நம்ப மாட்டார்கள் இவர்கள் தேர்ந்தெடுக்கும் தனிமையே இவர்களுக்கு பகை.

தொகுப்பு: முனைவர் செ.ராஜேஸ்வரி

 

The post விருச்சிக ராசி நோயும் தீர்வும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வலதுகாலை எடுத்து வைத்து வா… வா…