×

வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் ஆணையை திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார். எனவே, வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். எனவே, வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை பத்திரப்பதிவுத் துறை திரும்பப் பெற வேண்டும்.

The post வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் ஆணையை திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,PAMAK ,Deeds Department ,Registrar's Offices ,Villanga ,Dinakaran ,
× RELATED வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு...