பெர்ன்: சுவிட்சர்லாந்தின் செங்காலன் சென்மார்க்கிறெத்தன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தாமரை தடாக வாகனத்திலும், கப்பல் வாகனத்திலும் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சித்திரத்தேரில் கதிர்வேலர் பவனி வர பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.