×

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 4ம் தேதி கடையடைப்பு போராட்டம்: அன்புமணி அறிவிப்பு


சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கும் நிலையில், அந்த அணைகளில் மட்டுமின்றி, 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகளிலும் நீர் நிரப்பி ஆண்டு முழுவதும் உழவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உன்னத திட்டம் தான் தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் ஆகும்.

தருமபுரி மாவட்டத்தின் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளையும் ஏற்று, தருமபுரி மற்றும் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்.4ம் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பாமக அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த அறவழிப் போராட்டத்திற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு கொடுத்து திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 4ம் தேதி கடையடைப்பு போராட்டம்: அன்புமணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Palamaka ,President ,Anbumani ,Echampadi Dam ,Kesarakulidolam Dam ,Chinnaru Dam ,Tumpala Alli Dam ,Tophaiyaru Dam ,Nagawati Dam ,Panchapalli Dam ,Varataru Dam ,Vadaru Llimadurai Dam ,Vaniyaru Dam ,
× RELATED என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை...