×

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் நாளை மறுநாள் முதல் ரயிலில் முன்பதிவு செய்யலாம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வர். கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும்.  அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை, 14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி மாட்டுப் பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜனவரி 10ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12ம் தேதியும், ஜனவரி 11ம் தேதிக்கு பயணம் செய்ய 13ம் தேதியிலும், ஜனவரி 12ம் தேதிக்கு வரும் 14ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15ம் தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் நாளை மறுநாள் முதல் ரயிலில் முன்பதிவு செய்யலாம்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,CHENNAI ,Pongal ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகைக்கு ரயில் டிக்கெட்...