×

கள்ளக்குறிச்சியில் அக்.2ல் மது, போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்த ஒருங்கிணைந்த மைய சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான பிரச்சாரத்தை வட்டவாரியாக தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, மது மற்றும் போதை பொருள் தீமைகளை விளக்கி வாகனங்கள் இயக்குவது என்றும், மைய மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் மகளிரை அணி சேர்ப்பதும் என தீர்மானிக்கப்பட்டது.

 

The post கள்ளக்குறிச்சியில் அக்.2ல் மது, போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு appeared first on Dinakaran.

Tags : Alcohol and drug eradication women's conference ,Kallakurichi ,CHENNAI ,on alcohol and drug eradication ,Liberation Tigers Party ,Thol Thirumavalavan ,Central Chennai District Coordination Committee ,Women's conference on alcohol and drug eradication ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம்...