×

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக மம்தாவின் மருமகன் தொடர்ந்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: அமலாகக்கத்துறை சம்மனுக்கு எதிராக அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள அரசு பள்ளிகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பான ஊழல் வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி மீதான ஊழல் மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க தடையில்லை என்று கடந்த ஆண்டு மே. 26ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எங்களுக்கு கொல்கத்தா தான் பூர்வீடமாக இருக்கிறது. ஆனால் அமலாக்கத்துறை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கின்றனர். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு எங்களுக்கு விலக்களித்து உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கை விரிவாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 13ம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், ‘அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இதில் விசாரணை அமைப்பு சொல்லும் இடத்தில் தான் ஆஜராக வேண்டும். இந்த விவகாரத்தில் எந்தவித நிவாரணமும் வழங்க முடியாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மோசடி தொடர்பான வழக்கில் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக மம்தாவின் மருமகன் தொடர்ந்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mamata ,Supreme Court ,Delhi ,Abhishek Banerjee ,Enforcement Directorate ,Kolkata ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...