×

இந்திய ஒற்றுமை பயணத்தை விளக்கி ஒருவார காலத்திற்கு தெருமுனைக் கூட்டங்கள்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

சென்னை: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: ராகுல் காந்தி நடத்திய நடைப்பயணங்கள் மூலமாக 10 ஆயிரம் கிமீ தூரம் நடந்து, நாட்டு மக்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டதை நினைவு கூறுகிற வகையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் 2வது ஆண்டு நிறைவு நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் தங்களது யாத்திரையை நினைவு கூர்ந்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த செய்தியை காங்கிரஸ் நண்பர்கள் அனைவரும் ஒரு வார காலத்திற்கு மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம அளவில் தெருமுனை கூட்டங்களை நடத்தி பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

The post இந்திய ஒற்றுமை பயணத்தை விளக்கி ஒருவார காலத்திற்கு தெருமுனைக் கூட்டங்கள்: செல்வப்பெருந்தகை கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Congress ,state ,president ,Selvaperunthakai ,India Unity Journey ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED முன்னாள் காஞ்சிபுரம் எம்பி...