×

தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி அறிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம் &-3, ஆறு மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மின்வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.2 லட்சம் கோடியை நெருங்கும் நிலையிலும் தமிழக அரசும், மின்சார வாரியமும் மாறாமல், அதே அலட்சியத்துடன் செயல்பட்டால் மின்வாரியம் இப்போதைக்கு லாபத்தை ஈட்ட முடியாது. எனவே, தமிழக அரசும், மின்சார வாரியமும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை இனியாவது இலக்கு வைத்து நிறைவேற்ற வேண்டும். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

The post தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,Paramaka ,President ,Watchenai Ati Uiya Thermal Power Station &-3 ,Dinakaran ,
× RELATED கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல்,...