×

வாகனம் மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஆக.20: வேப்பனஹள்ளி அருகேயுள்ள பூதிமுட்டுலு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரராஜ்(60), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு, தனது டூவீலரில் வேப்பனஹள்ளி – பேரிகை சாலையில் உள்ள தாபா ஓட்டல் எதிரே சென்றபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வேப்பனஹள்ளி போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகனம் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Veerabhatraraj ,Bhoothimutulu ,Veppanahalli ,Dhaba Hotel ,Veppanahalli – Parikai Road ,
× RELATED போலி என்சிசி முகாம் நடந்த...