மலேசியா: தென்கிழக்காசிய திருப்பதி என்று மலேசிய பக்தர்களால் போற்றப்படும் இத்தலம் கிள்ளாங்கில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் ஆகும். இத்திருத்தலத்தின் மூலவராக ஸ்ரீதேவி - பூதேவி சதே ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் பெருமாள் சன்னதி, ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் மஹா லெட்சுமி சன்னதி, ஸ்ரீ கருடாழ்வார், ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி, ஸ்ரீ விநாயகர் சன்னதி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதி, ஸ்ரீ ஐயப்ப சுவாமி சன்னி, சனீஸ்வரர் சன்னதி, ஸ்ரீ நாகர் சன்னதி மற்றும் நவகிரக சன்னதியும் உள்ளது. இத்திருத்தலம் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.