×

குட்கா வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: குட்கா வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் செப்.9ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குட்கா வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் மற்றும் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் உட்பட செப்டம்பர் 9-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 2020 -ல் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.

The post குட்கா வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Gutka ,CHENNAI ,Madras Special Court ,C.Vijayabaskar ,B.V.Ramana ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு...