×

செத்தாலும் இனிமேல் ஏர்போர்ட்டில் பேச மாட்டேன்: டெல்லி செல்லும் அண்ணாமலை பேட்டி

சென்னை: செத்தாலும் ஏர்போர்ட்டில் பேச மாட்டேன் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் தெரிவித்தார். மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு நாளைக்கு 5 முறை பேட்டி கொடுத்து வந்தார். அதாவது, பிரசாரத்துக்கு புறப்படும் போது ஒரு பேட்்டி, பிரசாரம் முடிந்தபிறகு ஒரு பேட்டி, பிரசாரத்தின் இடையில் ஒரு பேட்டி, விமான நிலையத்தில் இறங்கும் போது பேட்டி, விமானத்தில் ஏறி செல்லும்போது ஒரு பேட்டி என்று யார் மைக்கை நீட்டினாலும் பேட்டி கொடுத்து வந்தார். இந்த நிலையில் மக்களவை தேர்தல் தோல்வி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன்- அண்ணாமலை மோதல் எதிரொலியாக டெல்லி தலைமை இரண்டு பேரையும் எச்சரித்தது. அதன் பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் ‘‘இனிமேல் வாழ்க்கையில் ஏர்போர்ட்டில் பேசவே மாட்டேன். இனி கட்சி அலுவலகத்தில் தான் பேட்டி கொடுப்பேன்.

இனி அனைத்து சந்திப்புகளும் அப்படித்தான் நடக்கும். பாத்ரூமிற்கு போகும்போது, வெளியில் வரும்போதும் எல்லாம் இனி பேச மாட்டோம் என்று அறிவித்தார். டெல்லி மேலிடம் பேட்டி கொடுப்பதில் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அண்ணாமலை புதிய சபதம் எடுத்தார். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் நிருபர் ஒருவர், ” அண்ணாமலை சார் திடீர் டெல்லி பயணம் ஏன்” என்றார். ஏர்போர்ட்டில் செத்தாலும் பேச மாட்டேன் ராஜா. இனி டிரைப் பண்ணாதீங்க ராஜா” என்று சென்று விட்டார். யார் மைக்கை நீட்டினாலும் பேட்டி கொடுத்து வந்த அண்ணாமலை, இந்த அளவுக்கு மவுனம் ஆனது ஏனோ என்று மற்ற நிருபர்கள் தங்களுக்குள் கிண்டல் அடித்து கொண்டனர்.

 

The post செத்தாலும் இனிமேல் ஏர்போர்ட்டில் பேச மாட்டேன்: டெல்லி செல்லும் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Delhi ,Chennai ,BJP ,President ,Lok Sabha elections ,
× RELATED அண்ணாமலை கார்ப்பரேட் மேனேஜர்: ஜெயக்குமார் விமர்சனம்