சீனாவில் பெய்த கனமழையால் 11.5 லட்சம் பேர் பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் 11.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 6.13 பில்லியன் யுவான் (சுமார் $859.75 மில்லியன்) நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூறாவளி மற்றும் கனமழையால் 95,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

1,07,500 ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியுள்ளன; 17,100 ஹெக்டேர் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. வடமேற்கு ஹுனானில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

The post சீனாவில் பெய்த கனமழையால் 11.5 லட்சம் பேர் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: