இந்த நிலையில், பூங்கா வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வியாபாரிகளுக்கு பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென்று பூங்கா கட்டுவதற்கு சுவர் எழுப்பியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வியாபாரிகள் சென்று, ‘’பார்க்கிங் ஏரியாவில் சுவர் எப்படி கட்டலாம்’ என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு அங்காடி நிர்வாக அதிகாரிகள் வந்த சுவர் எழுப்புவதை நிறுத்தினர். இதன்பின்னர் வியாபாரிகள், சி.எம்.டி.ஏ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில், ‘’வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் வியாபாரிகளுக்கு தெரியாமல் எப்படி சுவர் எழுப்பலாம்’ என்று தெரிவித்திருந்தனர். ‘’உங்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எந்த ஒரு வேலையும் நடக்காது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் பூங்கா அமைக்கப்படாது’ என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூங்காவுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு: பிரச்னையை தீர்த்து வைத்த அதிகாரிகள் appeared first on Dinakaran.