×

சாலை பணி தடுத்து நிறுத்தம்

 

புவனகிரி, ஜூலை 29: புவனகிரி பேரூராட்சி 14வது வார்டு பள்ளி வாசல் தெருவில் பேரூராட்சி சார்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அன்னை தெரசா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் சாலை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது அந்த பணிகளை திடீரென தடுத்து நிறுத்தினர். எங்கள் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லை.

அதனால் வடிகால் வசதி ஏற்படுத்தி விட்டு அதன் பிறகு சாலை அமைக்க வேண்டும் என கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி தகவலறிந்த புவனகிரி போலீசார் மற்றும் புவனகிரி பேரூராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பணிகள் தொடர்ந்து நடந்தது.

The post சாலை பணி தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Bhubanagiri ,Bhubanagiri Municipal Council ,14th Ward School Vasal Street ,Mother Teresa Nagar ,Dinakaran ,
× RELATED சாலை பணி தடுத்து நிறுத்தம்