×

வீட்டில் திருஷ்டி கழிக்க நரி தலையை வாங்கியவர், விற்றவர் கைது

 

முஷ்ணம், ஜூலை 27: வீட்டில் திருஷ்டி கழிக்க நரி தலையை வாங்கியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் ராஜதுரை மகன் ராமலிங்கம்(60). இவர் தனது வீட்டின் முன் திருஷ்டி கழிப்பதற்காக பதப்படுத்தப்பட்ட நரியின் தலையை சில நாட்களுக்கு முன் கட்டி உள்ளார். இது குறித்து சிதம்பரம் வனவர் பன்னீர் செல்வத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின் பேரில், வனவர் பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் சிதம்பரம் வனசரக அலுவலர் வசந்த் பாஸ்கரன் தலைமையில் புவனகிரி வன காப்பாளர் ஞானசேகரன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை நாச்சியார்பேட்டை ராமலிங்கம் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.அதில், பதப்படுத்தப்பட்ட நரி தலையை முஷ்ணம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த ராஜி(58) என்பவரிடமிருந்து பெற்றதாக தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, ராமலிங்கம், ராஜியை சிதம்பரம் வனச்சரக நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

The post வீட்டில் திருஷ்டி கழிக்க நரி தலையை வாங்கியவர், விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trishti ,Mushnam ,Rajadurai ,Ramalingam ,Natchiarpet ,Cuddalore district ,Dhristi ,
× RELATED விஷ பாட்டிலுடன் வந்த விவசாயியால் பரபரப்பு