- மதுரை
- மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம்
- துணை இயக்குநர்
- சண்முகசுந்தர்
- தின மலர்
மதுரை, ஜூலை 25: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் தொலை தொடர்பு நிறுவனத்திற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜூலை 26) நடைபெறுகிறது. இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டம் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப பணி நியமனம் பெற்லாம். வேலை தேடுவோர் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். முகாமில் கலந்து கொள்வோர் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை, கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும். இதன் வாயிலாக தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது. இவ்வாறு கூறியுள்ளார்.
The post தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.