- திருக்கோவிலூர்
- இன்ஸ்பெக்டர்
- மகேஸ்வரி
- அனைத்து பெண்கள் காவல் நிலையம்
- சந்தபேட்
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து உயர் அதிகாரிகளுக்கு சென்ற வண்ணம் இருந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி லஞ்சம் வாங்கிய வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி சங்கராபுரம் அடுத்த பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுகந்தி (35) குடும்ப பிரச்னை சம்பந்தமாக கணவர் மீது புகார் கொடுக்க வந்துள்ளார்.
இதனை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி முறையாக விசாரிக்காமல், எதிர் தரப்பினரான சுகந்தியின் கணவர் வெங்கடேசனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு புகார் கொடுத்த பெண்ணையே காப்பகத்துக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுர்வேதி திடீரென ஆய்வு நடத்தி குற்றச்சாட்டுக்கு ஆளான இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
The post லஞ்சம் வாங்கி புகாரை விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.