- Manur
- விவசாய துறை
- மானூர் மாவட்டம்
- உதவி இயக்குனர்
- மானூர் மாவட்ட விவசாயம்
- இசக்கியப்பன்
- கரங்காடு
- நரசிங்கநல்லூர்
- தென்பட்டு
- பேட்டை
- கண்டியப்பேரி
மானூர், ஜூலை 25: மானூர் வட்டாரத்தில் நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஜூலை 31ம் தேதி கடைசிநாள் என வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மானூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் இசக்கியப்பன் கூறுகையில் ‘‘ கருங்காடு, நரசிங்கநல்லூர், தென்பத்து, பேட்டை, கண்டியப்பேரி, சுத்தமல்லி, கங்கைகொண்டான் பகுதிகளில் தற்பொழுது நடவு செய்யப்பட்டிருக்கும் நெற்பயிர்களுக்கு வரும் ஜூலை 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். மேலும் இதற்கான ஆவணங்கள், முன்மொழிப்படிவம், ஆதார்அட்டை, சிட்டா அல்லது பட்டா பயிர்சாகுபடிச் சான்று, வங்கிப்புத்தகம் ஆகியவற்றுடன் அருகேயுள்ள வேளாண் கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்களை அணுகவேண்டும்’’ என்றார்.
The post நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஜூலை 31ம் தேதி கடைசிநாள் appeared first on Dinakaran.