×

கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை, ஜூலை 24: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேவகோட்டை அருகே நாகவயல் கிராமத்தை சேர்ந்த ஜேசு மனைவி காளீஸ்வரி. இவர்கள் இருவருக்கும் கடந்த 5ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து ஆண் குழந்தை உள்ளது. ஜேசு வெளிநாட்டில் வேலை செய்து கடந்த 7 மாதத்திற்கு முன்னர் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காளீஸ்வரி இது குறித்து போலீசில் புகாரளித்த நிலையில் போலீசார் நீதிமன்றம் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்த காளீஸ்வரி தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றினார். அங்கிருந்த போலீசார் அவரது உடல் மீது நீரை ஊற்றி அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Jesu ,Kaliswari ,Nagawayal village ,Devakottai ,
× RELATED வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு