ஒன்றிய பட்ஜெட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான செலவுகளுக்காக ரூ.1309.46 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதியாண்டிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தெரிகிறது. 2021-22ல் கூட ரூ.3768 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.
2023-24ல் ரூ.578.29 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது.2019 டிசம்பவர் 24ல் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ரூ.8,754.23 கோடியில் நடத்துவதற்கும், ரூ.3,941.35 கோடி செலவில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு மறுத்துவருகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். கடைசியாக 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்பிஆர் நடவடிக்கைகளுக்கு அரசுக்கு ரூ.12,000 கோடிக்கு மேல் செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த நிதியாண்டிலும் இல்லை appeared first on Dinakaran.