பாதுகாப்பு துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நடப்பு நிதியாண்டில் ரூ.6,21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மூலதனச் செலவு ரூ.1.72 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு 12.9 சதவீதம். மேலும், உள்நாட்டு மூலதன கொள்முதலுக்கு ரூ.1,05,518 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடையும் முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில் எல்லை போக்குவரத்து துறைக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க, ஸ்டார்ட்அப்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களால் வழங்கப்படும் தொழில்நுட்ப தீர்வுகளுக்கு நிதி அளிக்கும் ஐடெக்ஸ் திட்டத்திற்கு ரூ.518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் பாதுகாப்பு துறைக்கு ரூ.6.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post பாதுகாப்பு துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி appeared first on Dinakaran.