×

ஒரத்தநாடு அருகே வாகன சோதனை டூ வீலர்கள் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

 

ஒரத்தநாடு, ஜூலை 21: ஒரத்தநாடு அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் வாகன திருட்டு நடைபெற்றதை தொடர்ந்து காவல்துறைக்கு வந்த புகாரையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஒரத்தநாடு உதவி காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைபேரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்இன்ஸ்பெக்டர் உமாபதி, தனிப்படை எஸ்ஐ குமரவேல் மற்றும் காவலர்கள் ராஜா, தர்மலிங்கம், சின்னத்துரை மணிகண்டன் உள்ளிட்ட காவலர்கள் நேற்றுமுன்தினம் திருவோணம் பிரிவு சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மதுக்கூர் படைப்பக்காடு பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீர் மகன் செல்ல பஷீர்(20), மதுக்கூர் ஆற்றங்கரை தெரு பகுதி சேர்ந்த குமார் மகன் பெரமையன்(20), மதுக்கூர் சிவக்கொலை பகுதி சேர்ந்த ஷபீர் அலி மகன் முகமது ரபிக்(22) மற்றும் 15வயதிற்கு மேற்பட்ட ஒரு சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் 4 பேரையும் கைது செய்து ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நான்கு பேரையும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post ஒரத்தநாடு அருகே வாகன சோதனை டூ வீலர்கள் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,Thanjavur district ,Orthannadu ,Dinakaran ,
× RELATED அப்பாவின் அந்த வார்த்தை இன்று குழந்தைகளை மீட்க உதவுகிறது!