×

ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டித்து அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற 15 பேர் கைது

 

புதுக்கோட்டை, ஜூலை 21: புதுக்கோட்டையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்றதாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து வரக்கூடிய நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் அதற்கு நீதி வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி, நீலம் பண்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை ஊர்வலமாக அண்ணா சிலை நோக்கி புறப்பட்டனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் அனுமதியின்றி ஊர்வலம் செல்லக்கூடாது என்றும், ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று கூறினர். இதனால் காவல்துறையினருக்கும் ஊர்வலம் செல்ல முயன்றவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பின்னர் ஊர்வலம் செல்ல முயன்ற 15க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டித்து அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற 15 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Pudukottai ,Bahujan Samaj Party ,president ,
× RELATED மகனின் வளர்ச்சியை தடுத்து...