சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரம்: 6 பேரிடம் விசாரணை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் ஆறு பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். கடை ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக வித்வேதா பிஆர்ஜி நிறுவன இயக்குனராக இருந்த பாஜக நிர்வாகி பிரிதிவியிடம் விசாரணை நடத்தினர். தங்க கடத்தலில் கைதான யூடியூபர் சபீர் அலி, கடத்தல் கும்பல் சேர்ந்த இலங்கை குமாரிடமும் விசாரணை நடந்துள்ளது. பாஜக நிர்வாகியான பிரித்வி மூலம் விமான நிலையத்தில் கடையை பெற்றது தொடர்பாக சபீர் அலி, குமாரிடமும் விசாரணை நடத்தினர். ரூ.77 லட்சம் பணப்பரிவர்த்தனை தொடர்பாக வங்கி ஆவணங்கள் அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரம்: 6 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: