×

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, ஜூலை 20: சிவகங்கை அரண்மனைவாசல் முன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் முத்துராமலிங்கபூபதி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி தொடங்கி வைத்தார். இதில், மனிதக் கழிவுகளை அகற்ற தொழிலாளர்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

மனிதர்கள் கழிவுகளை அள்ளுவதை தடை செய்து முற்றிலும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மோகன், வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் மதி, மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Tamil Nadu Abolition of Untouchability Front ,Sivagangai Palace Gate ,Muthuramalingabhupathi ,Marxist District ,Karupuchamy ,
× RELATED வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு