×

கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோவில் கடத்திய 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி, ஜூலை 19: கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோவில் கடத்திய 1250 ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு சாலை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மந்திதோப்பு சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலை நகர் பகுதியில் வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 25 மூடை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையெடுத்து லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்திய வெள்ளாளங்கோட்டை சண்முகையா மகன் பால்ராஜ் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோவில் கடத்திய 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Lodu Auto ,Kovilpatti ,Kovilpatty ,West Police Station ,Manthoppu Road ,Dinakaran ,
× RELATED ‘வாழை’ படம் போல நடந்த கோர சம்பவம்:...