×

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

 

அரூர், ஜூலை 17: கோபிநாதம்பட்டி எஸ்ஐ கமலநாதன் மற்றும் போலீசார், கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப் படும்படி டூவீலரில் நின்றிருந்தவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். விசாரணையில், அவர்கள் பெரியாம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (44), பெரியாம்பட்டி வெங்கடேஷ்(28), கோபிநாதம்பட்டி கவின்ராஜ் (24) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Aroor ,Gopinathambatti ,SI Kamalanathan ,Gopinathambatti Koodrod ,
× RELATED ₹40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை