×

முகநூலில் பழகிய வாலிபருக்கு பைக் வாங்க தாலி செயினை கொடுத்துவிட்டு வழிப்பறி நாடகமாடிய இளம்பெண்

சிதம்பரம்: முகநூலில் பழகிய வாலிபருக்கு பைக் வாங்க தாலி செயினை கழற்றி கொடுத்துவிட்டு செயின் பறிப்பு நாடகமாடிய இளம்பெண்ணை போலீசார் தேடுகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளிப்படை பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மனைவி குட்டிமா (எ) சௌந்தர்யா (30). கடந்த 9ம் தேதி இந்திரா நகர் பகுதியில் குழந்தையை டியூஷனில் விட்டு விட்டு வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தான் அணிந்திருந்த நாலரை சவரன் தங்க தாலி செயினை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக புகார் கூறினார்.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் குட்டிமாவுக்கும், கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவருக்கும் முகநூலில் பழக்கம் உள்ளதாகவும், இதன் அடிப்படையில் சிக்கந்தர் பைக் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டதால், குட்டிமா தான் அணிந்திருந்த தங்கத் தாலியை அவரிடம் கழற்றி கொடுத்துவிட்டு குடும்பத்தாரை ஏமாற்றுவதற்காக மர்ம நபர் தாலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாக நாடக மாடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குட்டிமாவின் கணவர் வாசுதேவன் கொடுத்த புகாரின்பேரில் மாயமான குட்டிமாவை போலீசார் தேடி வருகின்றனர்.

The post முகநூலில் பழகிய வாலிபருக்கு பைக் வாங்க தாலி செயினை கொடுத்துவிட்டு வழிப்பறி நாடகமாடிய இளம்பெண் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Facebook ,Vasudevan ,Pallipat ,Cuddalore district ,Kutima (A) Soundarya ,
× RELATED சுதந்திர தினவிழாவை முன்னிட்டு...