தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை

கடையம்,ஜூலை 13: தென்காசி – கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று இப்பூஜை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் மலை உச்சியிலுள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும் மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது. தோரணமலை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகளை அழைத்து கவுரவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

The post தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை appeared first on Dinakaran.

Related Stories: