இதுதான் எங்கள் அணியின் பந்து வீச்சாளர்களிடம் நான் கூறி விவாதித்தேன். இந்த ஆடுகளத்தில் புதிய பந்து தான் நன்றாக செயல்படும் என்பதை கணித்தோம். எங்கள் அணியில் அனைவரும் வெற்றிக்கு பங்காற்றுகிறார்கள். இது ஒரு நல்ல அறிகுறி’’ என்றார். 4 ஓவர்கள் வீசி 15 ரன் கொ டுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதுபெற்ற வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் “நான் நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொரு முறையும் சிறப்பாக உணர்கிறேன். இது மிகவும் நல்ல உணர்வாக இருக்கிறது. கடந்த இரண்டு போட்டியை விட இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஜிம்பாப்வே வீரர்களின் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தது. இருப்பினும் எங்களுடைய திட்டங்களை சரியாக செய்து நாங்கள் வென்றோம். வரும் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுவோம்’’ என்றார். வாஷிங்டன் சுந்தர் இதுவரை 4 டெஸ்ட் , 19 ஒரு நாள் மற்றும் 45 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். 2017 டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 7 ஆண்டுகளாக 68 சர்வதேச போட்டிகளில் ஆடிய அவர் முதன்முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post 3வது டி20யில் ஜிம்பாப்வேவுடன் வெற்றி; அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடி தொடரை கைப்பற்றுவோம்: முதன்முறையாக ஆட்டநாயகன் விருதுபெற்ற வாஷிங்டன் நம்பிக்கை appeared first on Dinakaran.