துலாம் ராசியினரின் வாழ்க்கை துணை

பள்ளிப் பருவத்தில் செய்நேர்த்தி

துலாம் ராசி குழந்தைகளின் கையெழுத்து பள்ளிக் காலங்களில் மிகவும் அழகாக இருக்கும். கணக்கு ‘ஸ்டெப் பை ஸ்டெப்பாக’ செய்து இருப்பார்கள். அறிவியல் படங்கள் அழகாக வரைந்து பாகங்கள் குறித்து இருப்பார்கள். பலவண்ண பென்சில்களைப் பயன்படுத்தி மிக நேர்த்தியாக ஒவ்வொன்றையும் செய்வார்கள்.

கடுமையான எதிர்வினை

துலாம் ராசி மாணவர்களை சுற்றி மாணவர்கள் மட்டுமல்ல அண்டை அயல்வீட்டாரும் ஆசிரியப் பெருமக்களும் வயதில் மூத்தவரும் குழந்தைகளும் இருப்பது சகஜம். இவர்கள் எல்லோருக்கும் நல்லவராகதான் வாழ்வார்கள், பாராட்டப்படுவார்கள். சில சமயங்களில், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற வகையில் இவர்களின் எதிர்வினை இருக்கும். அதைச் சட்டென்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. புரிஞ்சவன் பிஸ்தா. ஆனால், அதன் பிறகு அவர்களுடைய நடவடிக்கையில் மாற்றங்கள் தெரியவரும். அடிப்பதோ சண்டை போடுவதோ திட்டி அனாவசியமான பேச்சுக்கள் பேசுவதோ இவர்களிடம் இருக்காது. பிறர் அறியா வண்ணம் விலகிச் சென்று விடுவார்கள். அந்த விலக்கத்துக்குக் காரணம் இவர் அல்ல என்று அனைவரும் கருதும்படி நடந்து கொள்வார்கள்.

மேடை மோகம்

துலாம் ராசி குழந்தைகள் எங்கு எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில், தான் பங்கேற்றே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் மேடையின் அருகில் போய் நின்று கொள்வார்கள். மேடையில் இருக்கும் யாராவது ‘இங்கே மேலே வா பாப்பா, இங்கே வா தம்பி’ என்று அழைத்தால், உடனே மேடையில் போய் பாரதியார் பாட்டு பாரதிதாசன் பாட்டு சொல்லி அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்று விடுவர். அல்லது அண்மை காலத்தில் புகழ்பெற்ற ஒரு திரைப்படப் பாடலை பாடுவர். கடி ஜோக் சொல்லுவர். எப்படியோ கூட்டத்தினரைச் சிரிக்க வைத்துத் தன் பக்கம் இழுத்துவிடுவர். குழந்தையின் பருவத்திலிருந்து இவர்களுக்கு மற்றவர்களின் கைதட்டலும் பாராட்டும் அன்றாடம் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

துலாம் ராசியினரின் கல்லூரிக் காதலும் கல்யாணமும்

துலாம் ராசியினரின் காதலி யார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மனதுக்குள்ளே காதலித்துக் கொண்டு வெளியே பத்தோடு பதினொன்றாக பேசிக் கொண்டிருப்பார். ஆனால், இவர் பார்வையின் பொருள் அந்த காதலிக்கு மட்டும் தெரியும். அவளிடமும்கூட தன் காதலை வெளிப்படுத்தி இருக்க மாட்டார். மற்ற நண்பர்கள் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறோம் திருமணம் செய்தால் அவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லும்போதுகூட இவர் ‘அவள் என் ஆள்’ என்று சொல்லி அவர்களை விலக்கி வைக்க மாட்டார். அவர்கள் பாட்டுக்கு பேசட்டும் என்று விட்டு விடுவார். திடீரென்று ஒரு நாள் ‘நான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அவளுடைய சம்மதத்தை பெற்று விட்டேன்’ என்று சொல்லி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து குறுகிய நாட்களில் திருமணம் செய்து கொண்டு நண்பர்களைவிட்டு விலகி விடுவார். இவ்வாறு கமுக்கமாக இருப்பது சனியின் வேலை. அவர்களே தாங்கள் இதுவரைக்கும் இவர் முன்னிலையில் பேசியது குறித்து வெட்கப்பட்டு ஒதுங்கிவிடுவர். அதன்பிறகு அந்த நண்பர்களை தன் வீட்டு பக்கம்கூட அனுமதிக்க மாட்டார்.

The post துலாம் ராசியினரின் வாழ்க்கை துணை appeared first on Dinakaran.

Related Stories: