×

சோத்துப்பாறை அணையை தூர்வார வேண்டும்; அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை!

தேனி: பெரியகுளம் சோத்துப்பாறை அணையை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார். அணையில் சேர்ந்துள்ள களிமண்ணை அப்புறப்படுத்தி தூர்வாரினால் மேலும் அதிக அளவில் நீர் தேக்க முடியும். சோத்துப்பாறை அணையிலிருந்து வெளியேறும் நீரால் 5,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களுக்கு சோத்துப்பாறை அணை குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளார்.

 

The post சோத்துப்பாறை அணையை தூர்வார வேண்டும்; அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Sothupparai dam ,Theni ,Periyakulam Sothupparai Dam ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..!!