×

நீட்தேர்வு அமலான பிறகு மருத்துவப் படிப்பு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்டது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை : நீட்தேர்வு அமலான பிறகு மருத்துவப் படிப்பு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டு வந்து உரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக மாணவர், மருத்துவர் அணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன, நீட் தேர்வை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு,மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அனைத்தையும் ரத்துசெய்தவர் கலைஞர்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நீட்தேர்வு அமலான பிறகு மருத்துவப் படிப்பு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்டது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Principal ,M.A. K. Stalin ,Chennai ,K. Stalin ,Chief Minister ,M.D. ,Tamil Nadu Legislative Assembly ,M.U. K. Stalin ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில்...