×

பாலியல் வழக்கு: அதிமுக மாஜி எம்எல்ஏ விடுதலை


நாகர்கோவில் : கடந்த 2020ல் கோட்டாறு பகுதியை சேர்ந்த 10வது வகுப்பு பயிலும் 15 வயது சிறுமி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் கோட்டாறு போலீசார் சிறுமியை மீட்டு விசாரித்தபோது, அவர் தன்னை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்பட சிலர் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்(60), சிறுமியின் தாயார் உள்பட 5 பேரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து நாஞ்சில் முருகேசன் உள்பட 5 பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

The post பாலியல் வழக்கு: அதிமுக மாஜி எம்எல்ஏ விடுதலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,MLA ,Nagercoil ,Kotaru ,
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...