×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,240க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ரூ.98.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை இன்று காலையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.640 உயர்ந்தது.

தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு பவுன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.53,440க்கு விற்கப்பட்டது.

13ம் தேதி ஒரு பவுன் ரூ.53,280, 14ம் தேதி ரூ.53,200 என விலை குறைந்தது. இன்று காலையில் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,705க்கும், பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.53,640க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,240க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...