×

சென்னையில் நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சென்னையில் நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும சிறப்பு அலுவலர் 22 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 6 மாதத்திற்குள் சென்னை பெருநகருக்கான நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 5904 சதுர கிலோ மீட்டர் கொண்ட சென்னை பெருநகருக்கான சரக்கு போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்பட உள்ளது.

The post சென்னையில் நகர சரக்கு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Chennai Metropolitan Integrated Transport Group ,Chennai Metropolitan ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...