இதையடுத்து ஜங்கையா உள்பட 3 பேரும் சேர்ந்து ரூ.950 கோடியை கொள்ளையடிப்பது என்றும், அதற்கு பதிலாக அந்த இடத்தில் கருப்பு பேப்பரை வைக்கவும் திட்டமிட்டனர். கடந்த 10ம்தேதி நள்ளிரவு திருமணந்துரை வீட்டுக்குள் நுழைந்தனர். 2 வாட்ச்மேன்களை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு வீட்டிற்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு தொழிலதிபர் திருமணந்துரை, அவசர போலீஸ் எண் 100க்கு தகவல் கொடுத்தார். உடனே ஆதிபட்லா போலீசார் விரைந்து வந்தனர். இதையறிந்த 14 பேர் கும்பல் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த விவரங்களின்படி தலைமறைவாக இருந்த போகினி ஜங்கையா உட்பட 14 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் வந்த 3 கார்கள், ஒரு ஸ்கூட்டி, 16 செல்போன்கள், இரும்பு கட்டர்கள், இரும்பு கம்பிகள், கருப்பு காகித மூட்டைகள், ரசாயனங்கள் மற்றும் ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
The post தெலங்கானாவில் சாக்லெட் கம்பெனி நடத்தி வரும் சென்னை தொழிலதிபர் வீட்டில் பதுக்கிய ரூ.950 கோடியை கொள்ளையடிக்க முயற்சி: 14 பேர் கும்பல் அதிரடி கைது appeared first on Dinakaran.