விரைந்து சம்பவ இடத்திற்கு ெசன்ற அம்பத்தூர் போலீசார், மகேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரித்தனர். அதில், மனநலம் பாதிக்கப்பட்ட அருண் தனது தந்தை மகேந்திரனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு நீ ஒழுங்காக மாத்திரை சாப்பிடவேண்டும் என்று சொல்லி பீடியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அருண், அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து மகேந்திரன் தலையில் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அருணை கைது செய்தனர். இதையடுத்து அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பீடி தர மறுத்ததால் ஆத்திரம் தலையில் கல்லை போட்டு தந்தையை கொன்ற மகன்: அம்பத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.