இந்த கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்துகிறது. நடப்பாண்டில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கு 660 இடங்களும், தொழில்நுட்ப படிப்புகளுக்கு 100 இடங்களும் உள்ளன. இவற்றில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 15 சதவீத இடம் போக மீதம் உள்ள இடங்கள் தமிழக மாணவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.
அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 13ம் தேதி வரை கால்நடை மருத்துவ படிப்பிற்கு 9 ஆயிரத்து 39 பேரும், தொழில்நுட்ப படிப்பிற்கு ஆயிரத்து 872 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தின் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. விண்ணப்ப பதிவு வரும் 21ம் தேதி வரையிலும், அயல்நாடு வாழ் இந்தியர்கள், அயல்நாட்டினர் ஆகியோருக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 5ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
The post இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு: ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.