இந்த நிலையில் தொழிலாளர்கள் ஒழிப்பு தினமான இன்று எஸ்பி.ஷ்யாம்ளா தேவி நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுவனை ஆறாம் வகுப்பில் சேர்த்தார். பின்னர் அந்த சிறுவனை எஸ்பி. வகுப்பறையில் அமர வைத்து வருங்காலத்தில் அரசு அதிகாரியாக வருமாறு வாழ்த்தினார். மேலும் சிறுவனின் தாயிடம் படிப்பு தேவையான உதவிக்கு தன்னை அழைக்குமாறு செல்போன் எண்ணையும் அளித்தார். இது குறித்து எஸ்பி.ஷ்யாம்ளா தேவி கூறுகையில் கல்வி யாராலும் அழிக்க முடியாத சொத்து. படிப்பு மட்டும் தான் வாழ்கை உயர்த்தும். மாணவர்கள் நன்றாக படித்து உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும். இதுபோன்று பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தில், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த எஸ்பி.ஷ்யாம்ளா தேவிக்கு பொதுக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகிறது.
The post குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த எஸ்பி பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.