இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

ராமநாதபுரம், ஜூன் 9: படகு இன்ஜின் பழுதால் இலங்கையில் கரை ஒதுங்கி கைதான தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. கடந்த மே 16ம் தேதி தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் இருந்து படகில் மீன் பிடிக்க மகேஷ்(23), வாஞ்சிநாதன்(25), ரஞ்சித்(27) ஆகியோர் கடலுக்கு சென்றனர். திடீரென படகின் இன்ஜின் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் படகு இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், மாதகல் கடற்கரை பகுதியில் படகு கரை ஒதுங்கியது. இதனால் மகேஷ், வாஞ்சிநாதன், ரஞ்சித் ஆகிய மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார். இது கீழமை நீதிமன்றம் என்பதால் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் வழியாக விடுதலை செய்யப்படுவார்கள் என மல்லாகம் நீதிபதி அறிவித்துள்ளார்.

The post இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்கள் விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: